Sunday, March 7, 2010

கவிஞன் ஆகும் முயற்சியில்

புன்னகை

சினம் கொண்டாலும் சின்னதாய் நகைப்பாய்
அந்த புன்முறுவலே போதும்

அகிலத்தை ஆண்ட அலெக்சாண்டரை விட
மெத்த மகிழ்ச்சி அடையப்பெற்றேன்

உன்னை நினைக்கையில்...

மறந்தேன் மணித்துளியை
மறக்கவில்லை என் உயிர் துளியை


பிறந்தநாள் வாழ்த்து...

முதலும் நானே முற்றமும் நானே, உன்னை வாழ்த்த

வான் மழையின் வருகயை முதலில் வாழ்த்தி நடனம் ஆடும் மயிலை போல
 
 
இறைவா வானில் உள்ள நிலாவுக்கோ மாதம் ஒரு முறை பிறந்த நாள்
ஆனால் மண்ணில் உள்ள எங்கள் நிலாவுக்கு மட்டும் ஏன் வருடத்தில் ஒரே ஒரு நாள்

இவள் வெண்ணிலவை விட உயர்ந்தவள் என்பதாலோ!!!
இவள் முழு நிலவாக எந்நாளும் ஒளி வீசி வாழ்வில் எல்லா இன்பமும் பெற்று வாழ நீ அருள் புறிய வேண்டும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 
 
அவள் நம்பாத பொழுது...

தமிழ் பார் கொண்ட அன்பினால் ஊற்றெடுக்கிறது கவிதை
அதை நம்பாதது மடந்தை

என்னுள் எழும் கவிக்கு நீயும் நிலவும் உடந்தை
தமிழுக்கு எந்நாளும் நான் குழந்தை


முத்தம்

உதடு கதறும் சத்தம் - முத்தம்!!
உள்ளம் கதறும் சத்தம் - காதல்!!

பிறிதொருநாள் உன்னை பார்த்தேன் உள்ளம் கதறியது, அன்று முதல் உன்னை காணும் பொழுதெல்லாம் உதடு கதற துடிக்கிறது !!


காதலும் வழுக்கையும்..

காதலும் வழுக்கையும் கொலையாளிகள்

ஒன்று உயிர்கொலை மற்றொன்று மயிற்கொலை...

மேலும் பல ஹைக்குகளை எதிர்பாருங்கள் .........